by Bella Dalima 31-03-2021 | 3:27 PM
Colombo (News 1st) பரீட்சைகள் திணைக்களத்தின் ஊழியர்கள் சிலர் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நாளாந்தம் வழங்கப்படும் மேலதிக நேர கொடுப்பனவு தாமதமாகியமையால் ஊழியர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விடயம் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் B.பூஜிதவிடம் வினவிய போது, ஊழியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவிற்கு தேவையான நிதியை திறைசேரியிடம் கோரியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
திறைச்சேரியினால் நிதி ஒதுக்கப்பட்டதும், அதனை விரைவாக ஊழியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.