இறுதி அஞ்சலி கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் பலி

மறைந்த தன்சானியா அதிபருக்கு இறுதி அஞ்சலி: நெரிசலில் சிக்கி 45 பேர் பலி

by Bella Dalima 30-03-2021 | 5:00 PM
Colombo (News 1st) மறைந்த தன்சானியா அதிபர் John Magufuli-க்கு இறுதி அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் பயங்கர நெரிசல் ஏற்பட்டதில் சுமார் 45 பேர் பலியானதாக உள்ளூர் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. முன்னதாக, 10-க்கும் குறைவானோர் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், 45 பேர் பலியானதாக உள்ளூர் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. தன்சானியா அதிபராக இருந்த John Magufuli கடந்த சில ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இதய நோயும் இருந்ததால் சிகிச்சை பலனளிக்காமல் மார்ச் 17-ஆம் திகதி John Magufuli காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து தன்சானியா நாட்டில் 14 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. மார்ச் 21-ஆம் திகதி உரு விளையாட்டரங்கில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன்போது, கட்டுக்கடங்காத கூட்டத்தில் பயங்கர நெரிசல் ஏற்பட்டு 45 பேர் பலியானதாகவும் 37 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.