யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளை மூட தீர்மானம்

யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளை ஒரு வாரத்திற்கு மூட தீர்மானம்

by Staff Writer 28-03-2021 | 5:09 PM
 Colombo (News 1st) யாழ். கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் நாளை (29) முதல் ஒரு வாரத்திற்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் COVID தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.