English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Mar, 2021 | 4:19 pm
Colombo (News 1st) தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் யாப்பினை பரிசீலிப்பதற்காக குழுவொன்றை நியமிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இனம் மற்றும் மத அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பதற்கு ஆணைக்குழு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் உத்தியோக பெயர்கள், அவ்வாறான இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டவையா என்பதை ஆராய்வதற்காகவே குழு நியமிக்கப்படவுள்ளது.
கட்சிகளின் யாப்பின் அவ்வாறான சரத்துகள் காணப்படின், அவை அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு முரணானதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு குழு நியமிக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கட்சிகளைத் தௌிவூட்டி, அவ்வாறான கட்சிகளின் பெயர்கள் மற்றும் கட்சிகளின் யாப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
26 May, 2022 | 03:41 PM
22 Jan, 2021 | 03:42 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS