by Staff Writer 27-03-2021 | 6:40 PM
Colombo (News 1st) யாழ் - கண்டி A9 வீதியின் திறப்பனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
பக்கமூன பகுதியிலிருந்து அநுராதபுரத்திற்கு யாத்திரை சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற வேனில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் பயணித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.