வனவாசல உள்ளிட்ட சில பகுதிகளில் நீர்வெட்டு

வனவாசல உள்ளிட்ட சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 27-03-2021 | 4:12 PM
Colombo (News 1st) வனவாசல உள்ளிட்ட சில பகுதிகளில் எதிர்வரும் 31 ஆம் திகதி இரவு 10 மணி தொடக்கம் முதலாம் திகதி மா​லை 04 மணி வரை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. வனவாசல, ஒலியமுல்ல, வத்தளை - நீர்கொழும்பு வீதி, எவரிவத்த வீதி, மீகஹவத்த, ஹேக்கித்த, பள்ளியவத்த, வெலியமுன வீதி, பலகல, கலஹதுவ, மருதானை வீதி, ஹெந்தல வீதி மற்றும் எலக்கந்த ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ஹேக்கித்த வீதியில் இடம்பெறும் நீர் கட்டமைப்பு விஸ்தரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.