மக்கள் சக்தி V-Force: மரங்களின் பாதுகாவலன் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்

by Staff Writer 27-03-2021 | 8:40 PM
Colombo (News 1st) காடுகளின் முக்கியத்துவத்தை நன்கறிந்த மக்கள் சக்தி V-Force அமைப்பு S-lon மற்றும் இலங்கை சாரணர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ''துரு கெப்பகரு'' எனும் மரங்களின் பாதுகாவலன் மர நடுகைத் திட்டத்தை நேற்று (26) ஆரம்பித்தது. 16 நாட்களில் 25,000 மரக் கன்றுகளை நடுவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும். ''துரு கெப்பகரு'' மரநடுகைத் திட்டத்தின் ஒரு கட்டம் இன்று கம்பஹா ஹேனகம மத்திய கல்லூரி, பியகம மகா வித்தியாலயம் மற்றும் நீர்கொழும்பு மேரி ஸ்ரெல்லா வித்தியாலயங்களில் முன்னெடுக்கப்பட்டது.