வரி செலுத்தாத கசினோ நிறுவனங்கள் 

தேசிய இறைவரித் திணைக்களத்திற்கு 24 கோடி ரூபா பெறுமதியான மீள திரும்பிய காசோலைகள்

by Staff Writer 27-03-2021 | 4:32 PM
Colombo (News 1st) தேசிய இறைவரித் திணைக்களத்திற்கு கடந்த வருடம் 24 கோடி ரூபா பெறுமதியான மீள திரும்பிய காசோலைகள் கிடைத்துள்ளமை அரசாங்க கணக்குகள் தொடர்பான குழுவினால் (COPA) வௌிக்கொணரப்பட்டுள்ளது. இந்தத் தொகையை வசூலிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு COPA குழுவினால் தேசிய இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கசினோ வியாபார நிறுவனங்கள் செலுத்த வேண்டியுள்ள 2,670 மில்லியன் ரூபா நிலுவை வரிப்பெறுமதியை வசூலிப்பது தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.