இவ்வருடத்தில் இதுவரை 4,907 பேருக்கு டெங்கு  

இவ்வருடத்தில் இதுவரை 4,907 பேருக்கு டெங்கு  

by Staff Writer 27-03-2021 | 5:37 PM
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4,907 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகளவானோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை 2,458 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் கடந்த மாதம் 1,070 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.