by Staff Writer 26-03-2021 | 3:08 PM
Colombo (News 1st) நேற்று (25) யாழ். மாவட்டத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் இதுவரை 642 COVID நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
இந்த நிலையில், யாழ். நகர்ப்பகுதியில் உள்ள சில கடைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கமைய, யாழ். நகரின் நான்கு வீதிகளிலுள்ள கடைகள் மூடப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
பழைய தபாலக வீதி , வைத்தியசாலை வீதியின் ஒரு பகுதி மற்றும் முன்னேஸ்வரம் வீதியில் உள்ள கடைகள் மூடப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.
குறித்த கடைகளில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.