கொழும்பு வர்த்தகருக்கு 60,000 ரூபா அபராதம்

நச்சுப்பொருள் கலந்த இரும்பு கொள்கலனுள் தேங்காய் எண்ணெய்: வர்த்தகருக்கு 60,000 ரூபா அபராதம்

by Staff Writer 26-03-2021 | 5:35 PM
Colombo (News 1st) நச்சுப்பொருள் கலந்த இரும்பு கொள்கலனுக்குள் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் வைத்திருந்ததை ஒப்புக்கொண்ட வர்த்தகர் ஒருவருக்கு 60 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மாளிகாகந்த நீதவான் கோஷல சேனாதீர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்களால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. கைப்பற்றப்பட்ட தேங்காய் எண்ணெயை அழிக்குமாறு கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறான குற்றச்செயல்கள் மீள இடம்பெறுமாயின் வர்த்தக நிலையத்திற்கு தடை விதிக்கப்படும் என நீதவான் குறித்த சந்தேகநபருக்கு எச்சரித்துள்ளார். கொழும்பு 13, ஆட்டுப்பட்டித்தெரு பகுதியிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளருக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.