English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
25 Mar, 2021 | 6:11 pm
Colombo (News 1st) இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்கர், காலஞ்சென்ற கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரரின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இன்று (25) நடைபெற்றன.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
பொதுமக்களின் அஞ்சலிக்காக கல்கிசை தர்மபாலராம விகாரையில் பிற்பகல் 1.30 வரை தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்தது.
அனுஷ்டானங்களின் பின்னர், தேரரின் பூதவுடலைத் தாங்கிய வாகனப் பேரணி கல்கிசை தர்மபாலாராமய விகாரையில் இருந்து காலி வீதியூடாக சென்று மாலை 3 .30 அளவில் சுதந்திர சதுக்கத்தை சென்றடைந்தது.
வீதியின் இருமருங்கிலும் இருந்த மக்கள் தேரரின் பூதவுடலை தாங்கிச் சென்ற பேழைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மகா சங்கத்தினர், சர்வ மத தலைவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் தேரரின் இறுதிக்கிரியையில் கலந்துகொண்டனர்.
கல்கிசை தர்மபாலாராமய விகாரையில் இருந்து புத்த சாசனத்திற்கு சேவையாற்றி வந்த இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரர் தனது 88 ஆவது வயதில் கடந்த 22 ஆம் திகதி இயற்கை எய்தினார்.
24 Mar, 2021 | 03:40 PM
17 Jul, 2020 | 05:47 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS