இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டதற்காக எஸ். ஜெய்சங்கர் பதவி விலக வேண்டும்: ப. சிதம்பரம் வலியுறுத்தல்

இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டதற்காக எஸ். ஜெய்சங்கர் பதவி விலக வேண்டும்: ப. சிதம்பரம் வலியுறுத்தல்

இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டதற்காக எஸ். ஜெய்சங்கர் பதவி விலக வேண்டும்: ப. சிதம்பரம் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2021 | 5:52 pm

Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதவி விலக வேண்டும் என இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருப்பது, தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பா.ஜ.க அரசு செய்த மாபெரும் துரோகம், மாபாதகச் செயல் என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர், அரசின் வற்புறுத்தலால் ஐ.நா மனித உரிமை பேரவை தீர்மானத்தைப் புறக்கணித்திருப்பாராயின், தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர் பதவி விலக வேண்டும் எனவும் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்