by Staff Writer 24-03-2021 | 3:25 PM
Colombo (News 1st) கொழும்பு - மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கராஜ மாவத்தையிலுள்ள உணவகத்தில் பரவிய தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உணவகத்தில் பணிபுரிந்த ஊழியரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 6.10 அளவில் தீ பரவியதாகவும் தீயைக் கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாகவும் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயுக் கசிவினால் தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தீ தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.