சுற்றாடல் அழிப்பிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்

by Staff Writer 24-03-2021 | 8:59 PM
Colombo (News 1st) சுற்றாடலுக்கு ஏற்படுத்தப்படுகின்ற பாதிப்பைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தது. இந்த எதிர்ப்புப் பேரணி கொழும்பு நகர மண்டபம் அருகில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பமானது. விஹாரமகா தேவி பூங்கா வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது. சுற்றாடலுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதிவாசிகளும் பாரம்பரிய சடங்கொன்றை நடத்தினர். ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கைகோர்த்திருந்தனர்.