இந்தியாவில் இரட்டிப்பு வீரியம் கொண்ட கொரோனா திரிபு

இந்தியாவில் இரட்டிப்பு வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு கண்டுபிடிப்பு

by Bella Dalima 24-03-2021 | 6:29 PM
Colombo (News 1st) இந்தியாவில் இரட்டிப்பு வீரியம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 18 மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 736 பேர் புதிய வகை கொரோனா திரிபு தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, 10,787 மாதிரிகளில் 736 பேர் பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் 34 பேர் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், புதிய வகை வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளது. எனினும், புதிய வகை வைரஸிற்கும் தொற்று அதிகரிக்கின்றமைக்கும் தொடர்பில்லையென இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் 47,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 275 பேர் உயிரிழந்துள்ளனர்.