கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் கைது

வனப் பகுதி அழிப்பு: கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் கைது

by Staff Writer 20-03-2021 | 4:06 PM
Colombo (News 1st) திருகோணமலை - கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வனப் பகுதியை அழித்து சில தரப்பினருக்கு காணியை பகிர்ந்தளித்தமை தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். எவ்வித அனுமதியையும் பெறாது வனப்பகுதியை பகிர்ந்தளிக்க பிரதேச சபை உறுப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு சென்ற வன இலாகா அதிகாரியின் கடமைகளுக்கும் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வான்-எல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.