பசறையில் பஸ் விபத்து - 7 பேர் பலி

பசறையில் பஸ் விபத்து - 7 பேர் பலி

by Staff Writer 20-03-2021 | 9:18 AM

COLOMBO (News 1st) - பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்று காலை 7.15 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. லுணுகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்று பசறை 13 ஆம் கட்டை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. பொதுப்போக்குவரத்து பஸ் சேவையொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.