சிங்கராஜ வனத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் V-FORCE தன்னார்வத் தொண்டர் படையணி

by Staff Writer 20-03-2021 | 3:48 PM
Colombo (News 1st) எமக்கு ஒட்சிஜனை வழங்கி உயிர்வாழ உதவும் சூழலை பாதுகாப்பதற்காக தன்னார்வத் தொண்டர்கள் சிலர் சிங்கராஜ வனத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் இணைந்துகொண்டுள்ளனர். கடமுதுன, சூரியகந்த, சிங்கராஜா வனப்பகுதியில் மரநடுகை திட்டத்தை இன்று V-FORCE தன்னார்வத் தொண்டர் படையணி முன்னெடுத்து வருகிறது. இந்த உன்னதமான கைங்கரியத்தில், சுற்றாடல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்  அரச நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன.