விஹாரமஹா தேவி பூங்கா அருகில் கவனயீர்ப்பு நடவடிக்கை

கொழும்பு விஹாரமஹா தேவி பூங்கா அருகில் கவனயீர்ப்பு நடவடிக்கை

by Bella Dalima 19-03-2021 | 4:45 PM
Colombo (News 1st) சுற்றாடலை பாதுகாக்கும் நோக்குடன் இளைஞர் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் கவனயீர்ப்பு நடவடிக்கை கொழும்பு விஹாரமஹா தேவி பூங்கா அருகில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அமைதியான வழியில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அழிவை தடுக்குமாறும் மிருகங்களை கொல்வதை தடுக்குமாறும் வளி மாசடைவதை தடுக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. தங்களின் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் இளைஞர், யுவதிகள் ஒன்று திரண்டுள்ளனர். சம்பவங்களை சித்தரிக்கும் நிழற்படங்களையும் உருவங்களையும் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏந்தி நிற்பதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.