கணவரின் இரண்டாம் தாரத்தை கொலை செய்த பெண் கைது

கணவரின் இரண்டாம் தாரத்தை கொலை செய்த பெண்; கொட்டகலையில் சம்பவம்

by Bella Dalima 19-03-2021 | 4:03 PM
Colombo (News 1st) கொட்டகலை - ஃபொரஸ்ட் க்ரீக் தோட்டத்தில் பெண்ணொருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெண்னொருவர் தனது மகளுடன் சென்று தனது கணவரின் இரண்டாம் தாரத்தை தாக்கிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். 44 வயதான பெண் ஒருவரே தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட 48 வயதான பெண்ணும் அவருடைய 21 வயதான மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்ணுக்கு தனது கணவரின் இரண்டாம் தாரத்துடன் நீண்டநாள் பிரச்சினை நிலவி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கணவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் திம்புலபத்தன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.