ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு 

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு 

by Staff Writer 18-03-2021 | 12:45 PM
Colombo (News 1st) ரயில் எஞ்சின் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. நாளாந்தம், காலை வேளையில் 48 ரயில் சேவைகள் இடம்பெறுவதாக பதில் ரயில் பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டீ.எஸ். குணசிங்க தெரிவித்துள்ளார். எனினும் பணிப்புறக்கணிப்பினால், இன்று காலை 14 ரயில் சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டுள்ளன.