சீனி மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஐக்கிய மக்கள் சக்தி  முறைப்பாடு

by Staff Writer 18-03-2021 | 9:29 PM
Colombo (News 1st) சீனி மோசடி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். 15 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியுள்ள சீனி வரி மோசடி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரே இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.