இளைஞர் கத்திக்குத்தில் பலி; சந்தேகநபர் கைது

கேகாலை - கந்தலோயா தோட்டத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகி இளைஞர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது

by Staff Writer 18-03-2021 | 5:12 PM
Colombo (News 1st) கேகாலை - கந்தலோயா தோட்டத்தின் கீழ் பிரிவில் கத்திக்குத்திற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தலோயா தோட்டத்தை சேர்ந்த 32 வயதான இளைஞர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலினால் நேற்று (17) மாலை இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, கத்திக்குத்திற்கு இலக்கான நபர் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் நாளை (19) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.