ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவருக்கு 31 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 17-03-2021 | 3:58 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் மோஹன மென்டிஸ் மற்றும் ஓய்வுபெற்ற உப பொலிஸ் பரிசோதகர் நவரத்ன பிரேமதிலக ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய இரு சந்​தேகநபர்களாவர். பொய் சாட்சியங்களை உருவாக்கி நீதிமன்றத்தை புறக்கணித்த குற்றச்சாட்டு இம்மூவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் மூவரும் சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத நிலையில், கம்பஹா நீதவான் மஞ்சுள கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.