ஏப்ரல் 21 தாக்குதல்: 25, 26 ஆம் திகதிகளில் விவாதம்

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை: 25, 26 ஆம் திகதிகளில் ஒத்திவைப்பு வேளை விவாதம்

by Staff Writer 17-03-2021 | 3:28 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை தவிர, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதமொன்றை நடத்துவது தொடர்பில் எதிர்க்கட்சி முன்வைத்த யோசனைக்கு ஆளும் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது. எனினும், விவாதத்தை நடத்துவதற்கான திகதி தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படவில்லை. அநேகமான வாய்மொழி கேள்விகள் குவிந்துள்ளதால், அதற்கான பதில்களை வழங்கும் நோக்கில் இரண்டு நாட்களுக்கு விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இன்று தீர்மானித்தனர். இதனடிப்படையில், விவாதத்திற்காக ஏப்ரல் மாதத்திற்குள் இரண்டு நாட்கள் ஒதுக்கப்படவுள்ளன.