இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம்

by Staff Writer 17-03-2021 | 3:47 PM
Colombo (News 1st) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிங்கராஜ வனம் உள்ளிட்ட வனப் பகுதிகள் அழிக்கப்படுவது தொடர்பில் சிரச தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் சிரச லக்‌ஷபதி நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த பாக்யா அபேரட்னவின் உரிமைகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காடுகளை அழிப்போருக்கு எதிராக குரல் கொடுத்த சாதாரண யுவதியை அச்சுறுத்தும் அரசாங்கத்தின் வெட்கமற்ற செயற்பாட்டிற்கு எதிராக அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.