English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
16 Mar, 2021 | 8:51 pm
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாளாந்த சம்பள விவகாரம் மீண்டும் தேசிய அரசியல் அரங்கின் பிரதான பேசுபொருளாகியுள்ளது.
1000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கான வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி, 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளன.
தொழில் அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பள நிர்ணய சபை என்பன எழுத்தாணை மனுவின் பிரதிவாதி தரப்புக்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
தொழில் அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய செயற்படுவதனூடாக, தமது தொழிற்றுறை பாரியளவில் பாதிக்கப்படுவதாகவும் அதனால் குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறும் மனுதாரர்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.
அரசாங்கத்துடன் மோதி சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் பிழை என்று தொழிற்சங்கங்கள் நீதிமன்றம் சென்றுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் மன்றில் தௌிவுபடுத்தி வழக்கில் வெற்றி பெற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை தாமதப்படுத்தும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கியுள்ளதாகவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
30 Mar, 2022 | 08:03 PM
12 Jan, 2022 | 04:17 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS