காடழிப்பு இடம்பெறும் இடங்களில் STF முகாம்களை ஸ்தாபிக்க தீர்மானம் 

காடழிப்பு இடம்பெறும் இடங்களில் STF முகாம்களை ஸ்தாபிக்க தீர்மானம் 

காடழிப்பு இடம்பெறும் இடங்களில் STF முகாம்களை ஸ்தாபிக்க தீர்மானம் 

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2021 | 7:42 am

Colombo (News 1st) காடழிப்பு இடம்பெறுகின்றமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முகாம்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சோமாவதி வனம், கிண்ணியா மற்றும் வன்னி பகுதிகள் உள்ளிட்ட  அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முகாம்களை ஸ்தாபிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் காடழிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்காக, இராணுவத்தின் ஒத்துழைப்பை பெறவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காடழிப்பை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு துறைசார் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்