செட்டிபாளையம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

செட்டிபாளையம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

by Staff Writer 15-03-2021 | 2:28 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - செட்டிபாளையம் கடற்கரையில் ஆணொருவரின் சடலம் இன்று (15) அதிகாலை கரையொதுங்கியுள்ளது. களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையம் கடற்கரையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. செட்டிபாளையம் கடற்கரை வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதானவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் நேற்று (14) மாலை தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கடற்கரைக்கு குளிக்க சென்றிருந்தார். இந்த நிலையில் அவரின் சடலம் கடற்கரையில் கரையொதுங்கியிருப்பதைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். மரண விசாரணையின் பின்னர் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.