கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள புதிய ஏற்பாடு

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள புதிய ஏற்பாடு 

by Staff Writer 15-03-2021 | 2:58 PM
Colombo (News 1st) கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் தமக்கு வசதியான நேரத்தில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபையின் www.colombo.mc.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக பதிவு செய்வதன் மூலம் நேரத்தை ஒதுக்கி தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷனி திசாநாயக்க தெரிவித்தார். இதற்கு எவ்வித இடைத்தரகரும் தேவையில்லை எனவும் மாநகர ஆணையாளர் குறிப்பிட்டார். இதனிடையே நாட்டில் இதுவரை 772,947 பேர் இதுவரை கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.