கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல் - 50 வீடுகள் தீக்கிரை

by Staff Writer 15-03-2021 | 2:04 PM
Colombo (News 1st) கிரேண்ட்பாஸ் - கஜீமா வத்தை பகுதியில் இன்று (15) அதிகாலை பரவிய தீயினால் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 2.40 மணியளவில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு பிரிவினர் குறிப்பிட்டனர்.