மன்னார் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

மன்னார் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

by Staff Writer 14-03-2021 | 7:04 PM
Colombo (News 1st) மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, சிறுநாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பனை மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (14) பிற்பகல் 01 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். மன்னாரை சேர்ந்த 36 மற்றும் 38 வயதான இரு ஆண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.