நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி கோட்டாபய கலந்துரையாடல்

பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்துரையாடல்

by Staff Writer 13-03-2021 | 5:24 PM
Colombo (News 1st) பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இன்று தொலைபேசியூடாக கலந்துரையாடியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் பல்தரப்பு விடயங்களின் அபிவிருத்தி மற்றும் நடப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் இதன்போது கலந்துரையாடியுள்ளனர். அத்துடன், COVID-19 சவால்களை எதிர்கொள்வது உள்ளிட்ட விடயங்களில் உரிய அதிகாரிகளுக்கு இடையிலான தொடர்பை தொடர்ச்சியாகப் பேணுவதற்கு இருநாட்டு தலைவர்களும் இணங்கியுள்ளதாக இந்தியப் பிரதமரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அயல்நாட்டிற்கு முன்னுரிமை கொள்கையின் முக்கியத்துவம் தொடர்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இதன்போது மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.