நிலாவௌி கடலில் குளிக்கச்சென்ற இருவர் சடலமாக மீட்பு

நிலாவௌி கடலில் குளிக்கச் சென்று காணாமற்போன இளைஞரின் சடலம் கரையொதுங்கியது

by Staff Writer 13-03-2021 | 6:23 PM
Colombo (News 1st) திருகோணமலை - நிலாவௌி கடலில் குளிக்கச் சென்று காணாமற்போன மற்றுமொரு இளைஞரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. யாழ்ப்பாணம் - குப்பிளான் பகுதியை சேர்ந்த இளைஞரின் சடலமே மீட்கப்பட்டுள்ளார்.​ே 7 பேர் கொண்ட நண்பர்கள் குழாம் நேற்று (12) மாலை நிலாவௌி கடலில் குளிக்கச் சென்றுள்ளனர். அவர்களில் நான்கு பேர் கடல் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் கூறினர். பொலிஸ் உயர் பாதுகாப்பு பிரிவினரால் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய இருவரில் ஒருவர் ஏற்கனவே சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 21 வயதான 7 பேர் கொண்ட நண்பர் குழாமே யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் குச்சவௌி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.