ராகலையில் 16 வீடுகள் தீக்கிரை

by Staff Writer 12-03-2021 | 4:16 PM
Colombo (News 1st) நுவரெலியா - ராகலை தோட்டம், இரண்டாம் பிரிவில் லயன் குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. எனினும், தற்போது தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பணிப்பாளர் A.M.R.N.K.அலகக்கோன் தெரிவித்தார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார். தீக்கிரையான 14 வீடுகளில் வசித்த 63 பேர் பாதுகாப்பாக உள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பணிப்பாளர் கூறினார். அவர்களை ராகலை தோட்டத்தின் கீழ் பிரிவிலுள்ள க்ளப் ஹவுஸ் எனும் கட்டடத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பணிப்பாளர் A.M.R.N.K.அலகக்கோன் குறிப்பிட்டார். மின் ஒழுக்கு காரணமாகவே தீ பரவியிருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தீ பரவிய குடியிருப்பு தொகுதியில் தடயவியல் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.