141 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

141 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

by Staff Writer 11-03-2021 | 1:59 PM
Colombo (News 1st) இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் - எழுவைத்தீவு கடற்பிராந்தியத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 42 மில்லியன் ரூபா பெறுமதியான 141 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்களின் டிங்கி படகினை சோதனையிட்ட போது, 52 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. மன்னாரை சேர்ந்த 21 மற்றும் 31 வயதான இரண்டு இளைஞர்களே கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.