by Staff Writer 11-03-2021 | 12:33 PM
Colombo (News 1st) இலங்கை பிரஜைகள் இருவர் இந்தியா - இராமேஷ்வரம் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச கடல் எல்லையை தாண்டி, இந்தியாவிற்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
இந்தியாவின் தனுஷ்கோடி கடற்பிராந்தியத்தை கண்காணித்த கடற்படையின் கண்காணிப்பு ஹெலிகொப்டர் வழங்கிய தகவல்களுக்கு அமைய, இலங்கை பிரஜைகள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னாரைச் சேர்ந்த அருள் குருஸ் மற்றும் ரேகன் ஆகியோரே இவ்வாறு அத்துமீறி இந்தியாவிற்குள் பிரவேசித்துள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.