4 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

4 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Staff Writer 10-03-2021 | 7:38 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் நேற்று (09) உறுதிப்படுத்தப்பட்டன. இதற்கமைய, கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உடுவில், ஹொரபே, அக்குறணை மற்றும் ராகமை ஆகிய பகுதிகளை வதிவிடமாகக் கொண்ட நால்வரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்திருந்தனர். இதனிடையே, நேற்றைய தினம் (09) 288 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 86,343 ஆக அதிகரித்துள்ளது.