சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

by Staff Writer 10-03-2021 | 3:47 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, மேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுகூறப்பட்டுள்ளது. அத்துடன், மன்னார் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவுமென திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.