குழுக்கள் இடையிலான மோதல் மரணத்தில் முடிந்தது

by Staff Writer 10-03-2021 | 11:40 AM
Colombo (News 1st) புத்தளத்தில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு (09) 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மோதலில் காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மோதல் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.