by Staff Writer 10-03-2021 | 8:09 AM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (10) ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சபை அமர்வு முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பில் மூன்று நாள் விவாதத்தை முன்னெடுப்பதற்கு கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
இதனடிப்படையில், முதல் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.
ஏனைய 2 விவாதங்களையும் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களாலேயே அறிக்கை மீதான விவாதம் தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டது.