க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்றுடன் நிறைவு

அமைதியான முறையில் வீடுகளுக்கு திரும்புமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

by Staff Writer 10-03-2021 | 7:03 AM
Colombo (News 1st) 2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்றுடன் (10)  நிறைவடைகின்றது. இன்று பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர், அமைதியான முறையில் வீடுகளுக்கு திரும்புமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 622,351 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.