கொரோனா தொற்றிலிருந்து 240 பேர் இன்று குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து 240 பேர் இன்று குணமடைந்தனர்

by Staff Writer 09-03-2021 | 5:54 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளாகிய 240 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,753 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நாட்டில் இதுவரை 86,039 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தொற்றுக்குள்ளாகியவர்களில் 2,779 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.