கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Staff Writer 09-03-2021 | 10:16 AM
Colombo (News 1st) இன்று (09) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 344 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி சுட்டிக்காட்டியுள்ளது. அவர்களில் 10 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர். ஏனைய 334 பேரில் அதிக தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 65 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 54 பேரும் கண்டி மாவட்டத்தில் 09 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 06 நபர்களும் மாத்தளை மாவட்டத்தில் 07 பேரும் பதுளை மாவட்டத்தில் 09 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் மூவரும் நுவரெலியா மாவட்டத்தில் 06 பேரும் யாழ். மாவட்டத்தில் 26 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 நபர்களும் புத்தளம் மாவட்டத்தில் நால்வரும் வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் புதிதாக தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு - கோட்டை பிரதேசத்தில் ஐவர், பொரளை பகுதியில் இருவர், அவிசாவளை பகுதியில் மூவர், பிலியந்தலை பிரதேசத்தில் 10 பேர், கொம்பனித்தெரு பிரதேசத்தில் ஒருவர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர். கம்பஹா - ராகமை பகுதியில் 12 பேரும் வத்தளை பிரதேசத்தில் இருவரும் நீர்கொழும்பில் மூவரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். அம்பாறை - அக்கரைப்பற்று பிரதேசத்தில் மூவருக்கும் சம்மாந்துறை பகுதியில் ஒருவருக்கும் பொத்துவில் பிரதேசத்தில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவில் பகுதியில் மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை பகுதியில் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, சுன்னாகம், சாவகச்சேரி, கோப்பாய், மானிப்பாய், வட்டுக்கோட்டை, வல்வெட்டித்துறை உள்ளடங்கலாக யாழ். மாவட்டத்தில் 26 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புத்தளம் - தங்கொட்டுவ பகுதியில் ஒருவர் மற்றும் ஆனமடுவ பகுதியில் மூவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று (09) காலை வரையில் நாட்டில் 86,039 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 82,513 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்றைய தினம் (08) 19 வயதான யுவதி ஒருவர் உட்பட 5 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன. அநுராதபுரம், ஹெம்மாத்தகம, கொழும்பு -06, தர்காநகர் மற்றும் ஜாஎல ஆகிய பிரசேங்களை சேர்ந்த ஐவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 7,194 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.