அரச ஊழியர்களை வழமையான சேவைக்கு அழைக்க தீர்மானம்

அரச ஊழியர்களை வழமை போன்று சேவைக்கு அழைக்க தீர்மானம் 

by Staff Writer 08-03-2021 | 3:26 PM
Colombo (News 1st) அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், அரச ஊழியர்கள் அனைவரையும் இன்று (08) முதல் வழமை போன்று சேவைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சின் செயலாளரினால் சுற்றுநிரூபமொன்று கடந்த வௌ்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அரசாங்க சுற்றறிக்கைகளுக்கு அமைய, சேவைக்கு அழைக்காத காலப்பகுதியில் நிரந்தரமாக்கல், தரமுயர்வு, ஓய்வு பெறல் தொடர்பிலான செயற்பாடுகளை ஏற்புடையாக்குவது தொடர்பிலான அறிவுறுத்தல் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.