அசோக் அபேசிங்கவை CID இல் ஆஜராகுமாறு அழைப்பு

அசோக் அபேசிங்கவை CID இல் ஆஜராகுமாறு அழைப்பு

by Staff Writer 08-03-2021 | 7:04 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நாளை (09) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வௌியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.