COVAX திட்டம் ; முதலாவது தடுப்பூசி தொகுதி நாட்டை வந்தடைந்தது 

by Staff Writer 07-03-2021 | 3:04 PM
Colombo (News 1st) உலக சுகாதார ஸ்தாபனத்தின் COVAX திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி தொகுதியை ஏற்றிய விமானம் இன்று (07) அதிகாலை நாட்டை வந்தடைந்தது. இந்த திட்டத்தின் கீழ் 264,000 தடுப்பூசிகள் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாக COVID - 19 தொற்றுக் கட்டுப்பாடு மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இதனிடையே, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டம் நிறைவடைந்ததன் பின்னர் கண்டி மாவட்டத்தின் அபாய வலயத்திலுள்ள மக்களுக்கு தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.