இராணுவத்தளபதி கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்

கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார் சவேந்திர சில்வா

by Staff Writer 06-03-2021 | 5:40 PM
Colombo (News 1st) பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி, இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு இன்று Astrazeneca Covishield தடுப்பூசி ஏற்றப்பட்டது. நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இன்று முற்பகல் அவருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் இந்திய உயர்ஸ்தானிகரும் அங்கு பிரசன்னமாகியிருந்தார். நாட்டின் பிரபல கலைஞர்கள் சிலரும் இன்று கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக இராணுவத் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.