வௌ்ளவத்தையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்

by Staff Writer 06-03-2021 | 3:48 PM
Colombo (News 1st) வௌ்ளவத்தை - கரையோர வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலை 5.45 அளவில் மதுபோதையில் ஒருவர் காரை செலுத்தியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கார், மோட்டார் சைக்கிளுடன் மோதி முதலில் விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மேலும் 3 பேர் மீது கார் மோதியுள்ளது. காயமடைந்த நான்கு பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மதுபோதையில் காரை செலுத்திய சாரதியும், மதுபோதையில் காரிலிருந்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்